” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_180

“நம்பிக்கை”

நம்பிக்கை உன் தும்பிக்கை
விழுந்தாலும் எழுவேன்
ஏற்றம் காண்பேன்
எழுந்து நிற்பேன்
உறுதியை உனதாக்கு!

நோய் வந்தாலும்
நொந்து போகாதே
நாள்பட்ட நோயும்
நள்ளிரவில் போய்விடும்!

உடல் உழைப்பை
உனதாக்கு
உற்சாகம் உன்னருகில்
தட்டி எழுப்பு
தளர்ந்து விடாதே!

உணவை மருந்தாக்கு
உடல் பயிற்சியை
விருந்தாக்கு
ஊக்கத்தை கைவிடாதே
ஊர் குருவி போல்
சுத்தி சுழன்றிடு!

நம்பிக்கை தான் வாழ்க்கை
ஆழமான நம்பிக்கை
ஆலமர நிழல் போன்றது!

நன்றி வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
22.02.25

Nada Mohan
Author: Nada Mohan