இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி__47

“இலக்கு”

நன்றாக படிக்கணும்
நற் பண்போடு
இருக்கணும்
நன்மைகள் செய்யணும்
நாலுபேர் மதிக்கணும்
நானிலம் போற்றணும்!!

வேலை செய்தே
பெற்றவர்களை
பார்த்தேன்
சகோதர்க்கு
உதவினேன்
சான்றோரை மதித்தேன்
சந்தோசமாக
வாழ்ந்தேன்!!

ஐரோப்பா பாக்கணும் என்று பேராசை
ஓர் ஆசை
ஒத்துழைத்தனர் பெற்றவரும்
உற்றவரும்!!

திருமண பந்தம்
என்றால்
வெளிநாட்டு மாப்பிள்ளை
வேண்டுமேன்றே அடமும் பிடித்தேன்
கனவும் கண்டேன்
இலக்கை அடைந்தேன்!!

குழந்தை குஞ்சு
குதுகல வாழ்க்கை
குலமும் மகிழ்ந்தது
இணையான் துணையான்
துணையுடன்!!

மாடி வீட்டில்
மாய்ந்த வாழ்க்கை
மாற்றம் காண வேண்டுமேன
இலக்கு கொண்டே
சொந்த வீடு கட்டி
இன்பம் கண்டோம்

இல்லறத்தில்
நல்லறம் கண்டு
இன்பம் கொண்டோம்
காய்த்த மரம் மட்டுமல்ல
கட்டிய வீடும்
கல்லறி வேண்டணும்
என்பதுவே குறிக்கோள்
என் இலக்கு!!

நன்றி
வணக்கம்
03.01.22

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading