சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 48

“ஒற்றுமை ”
ஒற்றுமையை உணர்த்தி
ஒன்று பட்டு உழைத்து
ஒன்றிணைந்த
நூல் வெளியீடு
பாவையின் பாவலரின் பக்குவம் பார்த்தோமே!!

ஒற்றுமையாக வாழ வேண்டுமே
ஒத்துழைத்து
ஆக வேண்டுமே
ஒத்தாசையாக
இருக்க வேண்டுமே
ஒப்புதல் கொள்ள வேண்டுமே!!

அன்பு காட்ட வேண்டும்
அல்லல் தீர்க்க
வேண்டும்
ஆதரவு கொடுக்க வேண்டும்
ஆறுதல் படுத்த வேண்டும்!!

இன்பம் துன்பமதில் கலந்திட வேண்டும்
இணையாய் துணையாய் கை கொடு
இரக்க சிறக்க வருவோர்க்கு
இயன்ற வரை
இசைவு காட்டு!!

நன்றி
வணக்கம்
08.01.22
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan