நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 285 ]
“அழியாத கோலம்”

வண்ணவண்ண மாக்கோலம் தமிழர்முற்றங்களை அழகூட்டும்
நெற்றியிட்ட குங்குமத்துடன் வதனத்தில் வட்டப்பொட்டும்
நேரியகூந்தலில் நிறை மல்லிகை வீசும் மணமும்
இவள் கோலம் தமிழ் பெண்ணென இனங்காட்டும்.

போர்மேகம் மூடி ஈழத்தமிழருக்கிளைத்த சோகம்
தலைமீது பொதியோடு தப்பியோடும் அகதிகளின் வேகம்
என்றும் நினைவூட்டும் தமிழரின் அழியாக்கோலம்
மனை மாடு தோட்ட மென நிறைவாக வாழ்ந்த இனம்

கடைகண்ணி வியாபாரமென பணந்தேடிய சனம்
கல்வியில் தேர்ச்சியும் கேளிக்கை விளையாட்டும்
இன்பமாய் பொழுது போக்கி இயல்பாக வாழ்ந்த சமூகம்
இன்று அகதிகளாய் புலம்பெயர்ந்து இறைஞ்சி வாழுங்கூட்டம்

” மறக்குமா நெஞ்சம்? மீளுமா அந்த அழியாத கோலம்? ”

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan