” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 288 ]
“பனிப்பூ”

உலகில்காணும் பொருட்கள் யாவும் மூவகை
திண்மம் திரவம் வாயு எனும் மூநிலை
தாகந்தீரப்பருகும் தண்ணீரோ திரவநிலை
நீருறைந்து பனிக்கட்டியாகும் திண்மநிலை

வெப்பத்தால் நீராவியாகும் வாயுநிலை
இவை தட்பவெப்பமாற்றத்தால் ஏற்படும்நிலை
ஆசைகள் நிறைவேறும்பொழுது ஏற்படும் களிப்பு
அதனால் மனதில் என்றென்றும் ஏற்படும் பனிப்பூ

மனிதவாழ்வின் தோல்வியால் தோன்றும் சலிப்பு
மனதில்தோன்றும் பனிப்பூ மலராதா எனும் நினைப்பு
நினைப்பவை நடந்துவிட்டால் தெய்வத்திற்கேது அழைப்பு ?
காதலில் வென்றால் இதயம் மெய்சிலிர்க்கும் பனிப்பூ

தோற்றவரால் இலக்கிய காவியங்கள் வளர்ப்பூ
போரினால் மடிந்தமக்களின்மனதில் மாவீரர் குடியிருப்பு
இடையே மௌனித்த ஈழப்போரில் மீண்டுமோர் துடிப்பு
கொட்டும் மழையிலும் கொண்டாடும் மாவீரர்தின மிடுக்கு

மாவீரர் தினநாளில் ஈழத்தமிழ் மனங்களில் பனிப்பூ
சுதந்திரதமிழர் தாயகம் ஒருநாள் விடியும் எனும் துணிபு.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan