இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 293 ]
“கவியழகு”

பரட்டைத்தலைமுடியும் பஞ்சடைந்த கண்ணும்
ஒட்டுப்போட்டும் மறையாத கிழிந்த உடையும்
தெருவிலே நடக்கும்போது தடுமாறும் நிலையும்
இவளை ஒரு அழகிஎன்றால் ஊரே நகைக்கும்

கண்ணாடி முன்னாடி கரகாடும் இன்றைய பெண்கள்
கண்டபடி பசைபூசி பள்ளங்களை நிரவும் கலைதெரிந்தவர்கள்
இவளைக்கண்டு இகழ் நகைபூப்பவர்கள்
பாவமிவள்! எண்ணைகண்டு பலநாள்

முகச்சாயமெறால் என்னவென்று தெரியாதவள்
பகட்டலங்காரம் கிஞ்சித்தும் அறியாதவள்
தீர்க்கமான பார்வை என்றும் குறையாதவள்
உழைத்துவாழும் நம்பிக்கை நிறைந்தவள்

இவளிடம் உள்ளது நிறைவான கவியழகு
மற்றவர்க்கில்லாத தனி அகஅழகு
புற அழகைமோகிக்கும் ஈனப்புத்தி மானிடர்க்கு
கவியழகின் உண்மைநிலை புரிவதில்லை இவருக்கு

உள்ளத்தால் உயர்ந்து நிற்கும் உத்தம பெண்ணே!
காலத்தாலும் அழியாதது உன் கவியழகு!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading