சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 222. ]
“பெற்றோரே”

பெற்றோரே! பெற்றோரே! பெருமை வாய்ந்த பெற்றோரே!
பெற்றதை சிறப்பாய் சீராக வளர்ப்பீரே!
அதிகாரமின்றி அடக்குமுறையின்றி பிள்ளையை நேயமுடன் வளர்ப்பீரே !
மனதில் தோன்றும் எண்ணங்களை சுதந்திரமாய் வெளியிடும் உரிமையை கொடுப்பீரே !
ஐந்தறிவுப்பூனையும் ஒடுக்குமுறைக்குச் சீறிப்பாயும்என்பதை அறியீரோ ?

அடக்குமுறை, எதிர்ப்பலைகள் பாசத்தை வேரறுக்கும் விதிவலைகள்
காலத்துக்கு ஏற்றவாறு நீங்களும் மாறித்தான் ஆகவேண்டும் பெற்றோரே !
அன்னையர்தினம் தந்தையர்தினம் சித்திராப்பௌர்ணமி ஆடி அமாவாசையில் கொண்டாடும் எம்மவரே பெற்றவர்தினம் கொண்டாட ஏன் மறந்தீர் பெற்றோரே !
அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம் என உரைத்த ஔவைப்பாட்டியும் பெற்றவரில் இருவரும் அடக்கம் என்பதால் சொல்லாமல் விட்டாரோ ?

கண்ணெதிரே உலாவிய தெய்வங்கள், விரும்பிய தெல்லாம் தந்த இறைவிம்பங்கள் நீங்களன்றோ பெற்றோரே !
தங்கள் பிள்ளைக்காய் தங்கள் வசதிகளைத்துறந்து தியாகவாழ்வு வாழ்ந்தவர் நீங்களன்றோ பெற்றோரே !
தங்கள் வசதிகள் குன்றாது முதியோர் இல்லம் அனாதை ஆச்சிரமம் என அலையவிட்டார் உம்மை பெற்றோரே !

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பொய்யாமொழிப்புலவர் கூறிச்சென்றாரே!
கவலை வேண்டாம் பெற்றோரே அவர்களும் ஒருநாள் உங்களிடத்தில் வருவாரே!
இந்தச்சாபமே மனதைவருத்துகிறதா பெற்றோரே !

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan