பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 228 ]
“பசுமை”

கண்ணுக்கெட்டிய தூரம் பசுமைமூடிய வயல்வெளி அலைமேவும்காட்சி
கண்ணுக்கு குளிர்மையூட்டும் மனதுக்கு நிறைவூட்டும் பசுமையின்மாட்சி
காக்கும் கடவுள் திருமாலெனும் பசுமைமேனியன் உள்ளம் நிறைஆளும் ஆட்சி
பசுமை காக்கும் மருதநிலமகளின் பசிபோக்கும் மீட்சி.

கூடிவாழ்ந்த உறவுகளின் அவலந்தீர போராடி
மறைந்த மாவீரர்களின்புகழை வரலாறு சொல்லும்
தனிமனிதர் சுதந்திரமும் கிட்டவில்லை இனத்தின் விடுதலையும் எட்டவில்லை
விழுப்புண்களும் வீரவடுக்களும் இன்றும் பசுமை நினைவுகளாய் நெஞ்சில் அலைமோதும்
அடிமனதில் எரியும் சுவாலை இன்னும் அணையவில்லை
மீண்டும் பற்றியெழ வெகுநேரமும் தேவையில்லை

முன்னோர் வாழ்ந்த அந்த அமைதி நிலை மீண்டும் உருவாகவேண்டும்
அந்நியர் தம் ஆக்கிரமிப்பில்லாத ஆட்சியிங்கே நிலவவேண்டும்
மனுநீதிபோற்றும் செங்கோல் இங்கு ஆட்சிபீடம் ஏறவேண்டும்.
பசுமைமிகு நாடென எம்நாட்டை பாரோர் புகழவேண்டும்.

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan