” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

“பரவசம்”

இளம் பருவ வாழ்வின் இன்ப நினைவுகள்
இதயம் நிறைந்து பொங்கும் நிலையில் பரவசம்
சீருடை தரித்து சிட்டுக்களாய் பறந்து திரிந்தகாலம்
பள்ளியில் படித்த போது பெற்றார் ஆசிரியர் மெச்சிய பரவசம்.

எண்ணிய கருமம் எளிதில் முடிந்திட மனம் நிறைய பொங்கும் பரவசம்
பருவங்கள் வந்து போக பரீட்சையும் வரும்,சித்தியடைந்த போது சிந்தையில் பரவசம்
எந்தையும் தாயும் எமை ஏத்தி வளர்க்கையில் பொறுப்புகளற்ற பொன்னான காலம்.
வாழ்க்கையில் ஒருமுறை வந்துபோகும் வசந்தம் போலவே வந்துபோனதே இணையிலா இளமைப்பருவம்

அன்றுபோல் இன்று ஏன் இன்பமாய் இல்லையே
பிறந்த மண்ணும் பழகிய உறவும் உண்மை அன்பும் என்றும் இன்பம்
காலங்கள் கடந்தும் கல்லில் எழுத்தாய் என்றும் நிலைக்கும்
பரவசம் தரும் பாலிய இன்பங்கள் என்றும் அழிவதில்லை.

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan