இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

சிவா சிவதர்சன்

“பரவசம்”

இளம் பருவ வாழ்வின் இன்ப நினைவுகள்
இதயம் நிறைந்து பொங்கும் நிலையில் பரவசம்
சீருடை தரித்து சிட்டுக்களாய் பறந்து திரிந்தகாலம்
பள்ளியில் படித்த போது பெற்றார் ஆசிரியர் மெச்சிய பரவசம்.

எண்ணிய கருமம் எளிதில் முடிந்திட மனம் நிறைய பொங்கும் பரவசம்
பருவங்கள் வந்து போக பரீட்சையும் வரும்,சித்தியடைந்த போது சிந்தையில் பரவசம்
எந்தையும் தாயும் எமை ஏத்தி வளர்க்கையில் பொறுப்புகளற்ற பொன்னான காலம்.
வாழ்க்கையில் ஒருமுறை வந்துபோகும் வசந்தம் போலவே வந்துபோனதே இணையிலா இளமைப்பருவம்

அன்றுபோல் இன்று ஏன் இன்பமாய் இல்லையே
பிறந்த மண்ணும் பழகிய உறவும் உண்மை அன்பும் என்றும் இன்பம்
காலங்கள் கடந்தும் கல்லில் எழுத்தாய் என்றும் நிலைக்கும்
பரவசம் தரும் பாலிய இன்பங்கள் என்றும் அழிவதில்லை.

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading