” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

“அலை ஓசை”

ஓடும்ஆற்றின் சலசலப்பில் அமைதிகலந்த அலையோசை
மாரிகாலப்பூரணையில் விண்ணைமுட்டும் கடலின் அலையோசை
நீரில் மட்டுமா அலையோசை? சக்தியின் பயணமெங்கும் பரவி நிற்கும் அலையோசை
மானிடவாழ்வில் புதைந்த இன்பதுன்பத்தை மீட்டிடும் அலையோசை

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இன்று தூள்பறக்கும் அலையோசை
இந்தியாவின் போட்டிகள் இன்று உலகையே அதிரவைக்கும் அலையோசை
பங்கேற்றும் நாடுகள் வெற்றிக்கிண்ண பேராசை
நேரிலும் நேரலையிலும் காண முண்டியடிக்கும் மக்களின் அலையோசை

அலையோசை தாலாட்டும் வல்லிபுரம் கடலோரம்
பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனின் தீத்ததோற்சவம்
ஆவணி அமாவாசையில் கடல் நீராடும் ஆழ்வார் கடல்மறையும் வண்ணம் அடியார் தம் பரிவாரம்
படைத்த உயிரினங்களை பாதுகாத்தருளும் திருமாலின் அவதாரம்
ஆண்டுக்கொருமுறை காட்டி மகிழும் அவதாரம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan