சிவா சிவதர்சன்

[ வாரம் 252 ]
“காதலர்”

கருத்தொருமித்த காதலரை மகிழ்விக்கும் காதலர்தினம்
மாசித்திங்கள் பதினான்காம் நாளை உலகமே காதலிக்கும் .
மானிடக்காதல்ப்பருவம் கல்யாணவைபோகம்காணுதல் அருவம்
அறியாதவருடன் திருமணம்செய்து புரியாத கடமைக்கான வாழ்வு.

பள்ளியில் படிக்கும் இளஞ்சிட்டுக்களிரண்டு
இருவருக்குமிடையில் இறுக்கமான தொரு இணைப்பு
காதலைகூறாமல் மூடிமறைத்ததால்
பள்ளிப்படிப்பும் படலையோடு போச்சு!

பொருத்தமான சோடி பல வாழ்வில் வந்துபோகும்
மனதில்வந்தகாதலை வெளிப்படுத்த வெட்கம் தடுக்கும்
அரிதான சந்தர்ப்பம் கதவைத்தட்டாமலே சன்னியாசம் கொள்ளும்
இறுதியில் துறவுதான் தன்விதியென இறைவனைச்சாடும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading