” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 252 ]
“காதலர்”

கருத்தொருமித்த காதலரை மகிழ்விக்கும் காதலர்தினம்
மாசித்திங்கள் பதினான்காம் நாளை உலகமே காதலிக்கும் .
மானிடக்காதல்ப்பருவம் கல்யாணவைபோகம்காணுதல் அருவம்
அறியாதவருடன் திருமணம்செய்து புரியாத கடமைக்கான வாழ்வு.

பள்ளியில் படிக்கும் இளஞ்சிட்டுக்களிரண்டு
இருவருக்குமிடையில் இறுக்கமான தொரு இணைப்பு
காதலைகூறாமல் மூடிமறைத்ததால்
பள்ளிப்படிப்பும் படலையோடு போச்சு!

பொருத்தமான சோடி பல வாழ்வில் வந்துபோகும்
மனதில்வந்தகாதலை வெளிப்படுத்த வெட்கம் தடுக்கும்
அரிதான சந்தர்ப்பம் கதவைத்தட்டாமலே சன்னியாசம் கொள்ளும்
இறுதியில் துறவுதான் தன்விதியென இறைவனைச்சாடும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Nada Mohan
Author: Nada Mohan