சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 24-03-2022
ஆக்கம் – 36
துளி நீர்

ஓரு துளி நீருக்கும் உயிருண்டு
பல்லுயிர்களின் உயிர்காக்கும் ஆகாரம்
உலகமே தண்ணீருக்கு தவிக்கும் காலம் வரும்
பொன் கிடைக்கும் ஓருவாய் தண்ணீர் கிடைக்காது

காடுகள் அழிந்து கானகமானது
கனமழைப் பொழிவும் கானல் நீரானது
பொழியும் மழையும் வீணாய் கடலில் கலக்கின்றது
பொறுப்பற்ற செயல்கள் வேதனை அழிக்கின்றது

வெற்றுக்குடங்கள் வேதனையில் கண்ணீர் வடிக்கின்றது
தவித்த வாய்க்கு தண்ணீர் தரமுடியாமல் போனதால்
நீச்சல் குளத்திற்க்கு நீரை நிரப்பும் கூட்டம் ஓருபுறம்
ஓருதுளி நீருக்கு தவிக்கும் உயிரினங்கள் மறுபுறம்

நீரின்றி அமையாது உலகு வள்ளுவன் வாக்கு
நீர்வளப் பெருக்கமும் நீர்மேலாண்மையும்
நிரந்தர தீர்வாய் அமைந்திடல் வேண்டும்
வான்மழை பெய்யட்டும் வையகம் சிறக்கட்டும்

ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
24-03-2022

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading