16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
சி.பேரின்பநாதன்
சந்தம் சிந்தும் கவிதை- 171
எதிர்ப்பு அலை
மாண்டதனால் வீழ்ந்து கிடக்கின்றது இலங்கை
மீண்டு எழுந்திட கை கொடுக்க யாருமின்றி
கொத்துக் கொத்தாய் எம் இனமக்களை
கொத்துக் குண்டுகளால்
கொன்று குவித்த பாவத்தின் சாபத்தால்
விதைத்த வினையின் அறுவடைக்காலம்
அன்று அறுத்த அரசனுக்கு
இன்று அறுக்கின்றான் இறைவன்
எதிர்ப்பு அலைக்குள் ஆட்டம் காணும்
அசுர ஆட்சிக்கப்பல் கவிழும் நிலையில்
எரிவாயு இன்றி வயிறு பற்றி
எரிகின்ற போது தெரிகின்றது
வாய்க்கரிசியின்றி முள்ளி வாய்காலில்
எம் இனமக்கள் பட்ட துன்ப துயரம்
பத்தும் பறந்து போனதனால்
சித்தம் தெளிந்து போனார்கள்
சங்கு ஊதும் சகுனி நாடுகள்
சுயநல அரசியலை நிறைவேற்ற
மதில் மேல் பூனையாய் பதுங்குகின்றன
மக்களின் எழுச்சி வீறுகொண்டு செல்கின்றது
இராவணன் ஆண்ட பூமிக்கு சாப விமோசனம் கிடைக்குமா
கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
14-04-2022
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...