பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சூரன்போர்

சிவதர்சனி இரா

வியாழன் கவி 2055

சூரன்போர்..

ஆறு நாட்கள் விரதம் இருந்து
அதர்மம் அழித்து தருமம் காத்த
அழகன் முருகனை வணங்கி
அல்லல் போக்கும் கந்தசஷ்டி..

பார்வதி மைந்தனாம் அழகனே
போர் புரிந்து சூரன் அவனை
சேவலும் மயிலுமாய் ஆக்கினான்
சேதியும் சொல்லும் கந்த சஷ்டி..

மயில்மேல் ஏறி உலகம் சுற்றி
ஆறுபடை வீடமர்ந்த முருகனே
தமிழ்க் கடவுளாம் வணங்குவோம்
மகிமை செப்பும் கந்த சஷ்டி..

குழந்தை வரம் வேண்டியே
குணமது பொறுமை காத்து
சஷ்டியிலே இருந்திடவே அகப்பையில்
வருமென்ற வாக்கு பலிக்கும் கந்த சஷ்டி
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading