செல்லாக்காசு

வசந்தா ஜெகதீசன்
செல்லாக்காசு..
வரம்பில் நில்லா நீர் போல
வரைமுறையற்ற செயல் போல
உலகை யாளும் பணத்தையும்
உதவாத நிலைக்குள் ஓரமிடும்
ஒற்றை வார்த்தை
செல்லாக்காசு
தரமே தாழ்ந்த நிலை உரைக்கும்
தகுதி இழந்து பலம் குன்றும்
தாக்கம் தந்திடும்
சொல்லிதுவே

தன்னைத் தானே புடமிட்டு
தரத்தில் மின்னை போல் பாய்ந்து
செல்லாக்காசும் ஒர்நாளில்
சிறப்பை எட்டிடும்
பெறுமதியில்
சீராய் நேராய் வாய்ப்புண்டு
விதியின் வசமும்
வாழ்வுண்டு.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading