செல்லாக்காசு

ஜெயம் தங்கராஜா

இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை புறக்கணித்தால்
உன் செயலை அவமதித்தால்

சொல் எடுபடாதவர் என்றானாய்
செல்வாக்கு இல்லாத நபரானாய்
செல்லாக்காசு என்பதாய் உன்னிலை
செல்வம் இழந்ததால் இன்நிலை

பையில் இருக்குமட்டுமே கூட்டம்
கையில் இல்லையென்றால் ஓட்டம்
பொய்யான மனிதரையும் தெரியும்
மெய்யான வாழ்க்கையும் புரியும்

கூப்பிட முன்பே வருவார்
சாப்பிட அமிர்தமே தருவார்
பிள்ளையாகி அக்கறை இருக்கின்றபோது
இல்லையென்றால் ஊருலகம் மதிக்காது

உலக வாழ்க்கை இப்படித்தான்
பழகும் பாசமாக அப்படித்தான்
நிலவரம் மோசமானால் செல்லாக்காசு
நிலைமையோ அற்பமான வெறுந்தூசு

20-06-2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading