சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

செல்லாக்காசு

ஜெயம் தங்கராஜா

இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை புறக்கணித்தால்
உன் செயலை அவமதித்தால்

சொல் எடுபடாதவர் என்றானாய்
செல்வாக்கு இல்லாத நபரானாய்
செல்லாக்காசு என்பதாய் உன்னிலை
செல்வம் இழந்ததால் இன்நிலை

பையில் இருக்குமட்டுமே கூட்டம்
கையில் இல்லையென்றால் ஓட்டம்
பொய்யான மனிதரையும் தெரியும்
மெய்யான வாழ்க்கையும் புரியும்

கூப்பிட முன்பே வருவார்
சாப்பிட அமிர்தமே தருவார்
பிள்ளையாகி அக்கறை இருக்கின்றபோது
இல்லையென்றால் ஊருலகம் மதிக்காது

உலக வாழ்க்கை இப்படித்தான்
பழகும் பாசமாக அப்படித்தான்
நிலவரம் மோசமானால் செல்லாக்காசு
நிலைமையோ அற்பமான வெறுந்தூசு

20-06-2025

Nada Mohan
Author: Nada Mohan