சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

செல்வஇ தெய்வேந்திரமூர்த்தி

தண்ணி கண்ட இடத்திலே
“”””””””””””””””””””””””

வேறு வேறு வேடமும்
வேற்று நாட்டுப் பாடமும்
சேறு கண்டு சென்றிடும்
செம்மை யற்ற மனிதனே
ஆறு தன்னை அடைந்துமே
அழுக்கு வாழ்வை அகற்றடா
மாறும் உலக நியதியில்
மாற்றம் வேண்டும் மாறடா!

கூறு மாகும் குடும்பமும்
குலத்தின் மானம் வீழுமே
ஏறு போன்ற நடையிதற்
கேற்ற வாழ்வைத் தேர்ந்தெடு
தாறு மாறு மாவதோ
தடுக்கி நீயும் வீழ்வதோ
தேறு மாறு கேட்கவே
தேடித் தேடி வருகிறேன்!

மாறு மாறு என்பதே
மாசில் லாமல் வாழவும்
நாறு மாறு வாழ்க்கையுள்
நாடி ஓடா தோங்கவும்
நூறு நூறாய் மாந்தரும்
நுழையு மிந்த அவலமும்
நீறு மாகும் வரையிலும்
நெருங்கி டாமல் தவிர்க்கவே!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading