செல்வி நித்தியானந்தன்

நம்பிக்கை

இயற்கை இறையுடன்
இல்லறம் இணைவாய்
நம்பிக்கை கொள்ளல்
சாலவும் சிறப்பு

பெற்றவர் பிள்ளைகள்
தொடர்திடும் நம்பிக்கை
மற்றவர் இணைவும்
மாண்புறும் நாளும்

விடியலின் அத்தியாயம்
முடியுமே நம்பிக்கை
விழுந்தும் எழுந்தாலும்
விரட்டிவிடு துணிவாய்

நம்பிக்கை வாழ்வு
நாளை சரிதம்
தும்பிக்கையான் துணை
துலங்கிடும் இறையே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading