சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ஜமுனாமலர் இந்திரகுமார்

எங்கே உன் இனம்
இன்றும் நான் தேடுகின்றேன்

சின்னஞ் சிறு பூச்சி நீ
மென்மையான கால்களால் மெல்லெடுத்து ஊர்ந்திடுவாய்
சிவத்த நிற மேனியுடன்
வெண்மணலில் உலா வருவாய்
செந்நிற கம்பளம் விரிக்கும்
வர்க்கம் போல்
பணக்காரப் பூச்சியடி
வெண்மணலில் பூத்திடுவாய்
வானமழை பொழிந்துவர
நிலத்திருந்து விழித்தெழுவாய்

மென்மையான பூச்சியடி
என்னூரில் தேடுகின்றேன்
இற்றைவரை காணவில்லை

உள்ளங்கையில் வைத்துன்னை
உளம் கனிய எண்ணுகிறேன்
தம்பளப் பூச்சியே
உனை எண்ணி
செந்நிறத்தைத் தேடுகின்றேன்
ஊர்ந்து வர வேண்டுகிறேன்
உன் இனம் எங்கேயோ
செம்மண்ணை மறந்தாயோ
சின்னஞ் சிறுவயதில்
எண்ணி எண்ணி பிடித்தேன் உனை
கம்பளம் விரிக்கையில்
உன் நினைவை நாடுகின்றேன்
தம்பளப் பூச்சியே!
எங்கே நீ சென்றாயோ!

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan