மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

ஜமுனாமலர் இந்திரகுமார்

எங்கே உன் இனம்
இன்றும் நான் தேடுகின்றேன்

சின்னஞ் சிறு பூச்சி நீ
மென்மையான கால்களால் மெல்லெடுத்து ஊர்ந்திடுவாய்
சிவத்த நிற மேனியுடன்
வெண்மணலில் உலா வருவாய்
செந்நிற கம்பளம் விரிக்கும்
வர்க்கம் போல்
பணக்காரப் பூச்சியடி
வெண்மணலில் பூத்திடுவாய்
வானமழை பொழிந்துவர
நிலத்திருந்து விழித்தெழுவாய்

மென்மையான பூச்சியடி
என்னூரில் தேடுகின்றேன்
இற்றைவரை காணவில்லை

உள்ளங்கையில் வைத்துன்னை
உளம் கனிய எண்ணுகிறேன்
தம்பளப் பூச்சியே
உனை எண்ணி
செந்நிறத்தைத் தேடுகின்றேன்
ஊர்ந்து வர வேண்டுகிறேன்
உன் இனம் எங்கேயோ
செம்மண்ணை மறந்தாயோ
சின்னஞ் சிறுவயதில்
எண்ணி எண்ணி பிடித்தேன் உனை
கம்பளம் விரிக்கையில்
உன் நினைவை நாடுகின்றேன்
தம்பளப் பூச்சியே!
எங்கே நீ சென்றாயோ!

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading