ஜமுனாமலர் இந்திரகுமார்

தீ

சிக்கி முக்கி கற்களின்உரசலில்
தீயாய் வந்தது
தீயதை எரித்து
தூயது காணும்
போகிப் பண்டிகை ஆனது
பழையன கழித்து
புதியன புகுத்தி
தை மகள் வருவாள்
செம்மண் அடுப்பொடு
செந்தணல் வீசி
பொங்கி மகிழ்வாள்

சீதையின் சீற்றம்
தூயதாய் ஏற்றது செந்தணல்
கண்ணகி சீற்றம்
மதுரையை எரித்ததும் அத்தணல்
எரிந்த மதுரை
புகழினைப் பெற்றதும் நற்றணல்

நெற்றிக் கண்ணில் தீப்பொறி பறந்தது
பறந்த பொறிகளோ
குழந்தைகள் ஆனது
ஆக்கலும் அழித்தலும்
அக்கினிக்கு உண்டு
வாழ்வியல் போலவே
அக்கினி கொள்ளுது

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading