மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஜமுனாமலர் இந்திரகுமார்

தீ

சிக்கி முக்கி கற்களின்உரசலில்
தீயாய் வந்தது
தீயதை எரித்து
தூயது காணும்
போகிப் பண்டிகை ஆனது
பழையன கழித்து
புதியன புகுத்தி
தை மகள் வருவாள்
செம்மண் அடுப்பொடு
செந்தணல் வீசி
பொங்கி மகிழ்வாள்

சீதையின் சீற்றம்
தூயதாய் ஏற்றது செந்தணல்
கண்ணகி சீற்றம்
மதுரையை எரித்ததும் அத்தணல்
எரிந்த மதுரை
புகழினைப் பெற்றதும் நற்றணல்

நெற்றிக் கண்ணில் தீப்பொறி பறந்தது
பறந்த பொறிகளோ
குழந்தைகள் ஆனது
ஆக்கலும் அழித்தலும்
அக்கினிக்கு உண்டு
வாழ்வியல் போலவே
அக்கினி கொள்ளுது

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading