ஜெபா தெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-20

24-10-2023

ஆறு மனமே ஆறு

நிலையென நினைத்த சந்தோஷம் நிர்கதியாகி நிமிடத்தில் தொலைந்ததும்
நித்தமும் தேடும் எவையும் உலையில்ப் போடமுன் விலையைக் கண்டு துடிப்பதும்
மலை போல சில அழுத்தம் மனதை நெருடுவதும்,
உருளும் வண்டியின் சக்கரம் போல் ஒரு நாள் உருண்டோடி விடும்.

விஞ்ஞானம் படித்து மகன் விஞ்ஞானி ஆவான் என்றும்
தமிழைப் படித்து இவன் தாய் மண்ணை காப்பான் என்றும் கனவு கண்டால்..
தஸ் புஸ் எனப் பிறமொழியைப் படித்ததும் இன்றி, இவன் கணனியில காலத்தை வீணாகக் கழிக்கிறானே!
கண்ட மனமே கலங்காம ஆறு நீ,
வெட்டாட்டத்தில் தாயம் போட்டு வெண்டவனும் உண்டு தானே!

இன்றைய வலிகளெல்லாம் நாளைய பலமேயாம்!
தோல்வி கண்டு துவண்டிடாமல், கடும் உழைப்போடு ஊதியமாக்கி
வீழ்ந்து எழும் நேரமெல்லாம் மனதில், வீரன் ஒருவன் அனலாய் பொறிந்து
எல்லா வெற்றியும் எம் கையில் ….
என்றெண்ணி ஆறு மனமே ஆறு!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading