19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-20
25-01-2024
நிலாவில் உலா
தித்தித்த அன்றைய நினைவுகள்
தீயாய்ப் படருது மனதினிலே
தத்தித் தத்தி நடக்கையிலே தாவி
தந்தை கைபிடித்து வருகையிலே
ஆயிரம் கேள்விகள் என்னுள்
திரும்பித் திரும்பி கணக்கிட்டேன்
குழப்பத்தில் நானும் குறுக்கிட்டேன்
எத்தனை நிலா எம் ஊரினிலே?
தந்தை தந்த பதிலினிலே
வட்ட நிலா உன் வதனம் போல்
ஒற்றை நிலா உலா வருவதை
உற்று நோக்கி நானிருக்க.
வருடம் பலவும் உருண்டோட
வதனமும் மேலும் வயதேற
சந்திரயான் உலா வந்த நிலாபோல
கரடு முரடானதுவே வதனமுமே.
கவனம் உன்னிலும் நிலை நாட்டு
கண்டதையெல்லாம் தலையில் இடாதே
வலிகள் வரலாம், வாய்விட்டு பேசு
கை கோர்த்து உலா வா நிலவினிலே.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...