ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-20

25-01-2024

நிலாவில் உலா

தித்தித்த அன்றைய நினைவுகள்
தீயாய்ப் படருது மனதினிலே
தத்தித் தத்தி நடக்கையிலே தாவி
தந்தை கைபிடித்து வருகையிலே

ஆயிரம் கேள்விகள் என்னுள்
திரும்பித் திரும்பி கணக்கிட்டேன்
குழப்பத்தில் நானும் குறுக்கிட்டேன்
எத்தனை நிலா எம் ஊரினிலே?

தந்தை தந்த பதிலினிலே
வட்ட நிலா உன் வதனம் போல்
ஒற்றை நிலா உலா வருவதை
உற்று நோக்கி நானிருக்க.

வருடம் பலவும் உருண்டோட
வதனமும் மேலும் வயதேற
சந்திரயான் உலா வந்த நிலாபோல
கரடு முரடானதுவே வதனமுமே.

கவனம் உன்னிலும் நிலை நாட்டு
கண்டதையெல்லாம் தலையில் இடாதே
வலிகள் வரலாம், வாய்விட்டு பேசு
கை கோர்த்து உலா வா நிலவினிலே.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-06-2025 வண்ணப் பெண்ணவளாய் வாஞ்சையோடு உலாவருவாள் குடும்பமென அர்ப்பணித்து குலவிளக்காய் சுடர்விட்டாள் வாழ்நாள் முழுதும் உழைத்து வானம்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading