28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-20
25-01-2024
நிலாவில் உலா
தித்தித்த அன்றைய நினைவுகள்
தீயாய்ப் படருது மனதினிலே
தத்தித் தத்தி நடக்கையிலே தாவி
தந்தை கைபிடித்து வருகையிலே
ஆயிரம் கேள்விகள் என்னுள்
திரும்பித் திரும்பி கணக்கிட்டேன்
குழப்பத்தில் நானும் குறுக்கிட்டேன்
எத்தனை நிலா எம் ஊரினிலே?
தந்தை தந்த பதிலினிலே
வட்ட நிலா உன் வதனம் போல்
ஒற்றை நிலா உலா வருவதை
உற்று நோக்கி நானிருக்க.
வருடம் பலவும் உருண்டோட
வதனமும் மேலும் வயதேற
சந்திரயான் உலா வந்த நிலாபோல
கரடு முரடானதுவே வதனமுமே.
கவனம் உன்னிலும் நிலை நாட்டு
கண்டதையெல்லாம் தலையில் இடாதே
வலிகள் வரலாம், வாய்விட்டு பேசு
கை கோர்த்து உலா வா நிலவினிலே.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...