23
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-06-26
உழைக்கும் கைகளின் சுமையே
இலக்கை எட்டுகையில் சுகமே
நினைக்க இனிக்கிறது தினமே
நிழலாய்...
23
Jul
சிறகடிக்கும் நினைவலைகள்
இரா.விஜயகௌரி
சிந்தனைச் சுழல் விரிய
செம்மையுறும் எழில் பொழிய
விந்தையென நினைவில் எழும்
வீரியத்தின் சுந்தரங்கள்
எந்தையும் தாயும் இணை
கனவெழுதும்...
23
Jul
நெருப்பு நினைவுகள்…..
ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026
இன்றையநாள் யூலை இருபத்திமூன்று
அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள்
கனதியாய்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-37
21-05-2024
நிர்மூலம்
இயற்கையை அழிக்கத் துணிந்ததனால்
விளைந்தது மாசுக்களும், நோய்களுமே
உடலுக்கு தீங்கை வகுத்ததுவே
உயிரையும் குடித்து தீர்த்ததுவே!
சொந்த மண்ணில் பரிதவிப்பு
சொத்து சுகம் தொலைத்த நிலைப்பு
சொந்தமெல்லாம் பேரிழப்பு
சொல்லவொணா நிர்மூலம் எமக்கு
கருங்கல் தெய்வச்சிலையாய் வடிக்கப்பட்டு புனிதம் பெறுவது போல்
நினைவுக் கற்களும், தூபிகளும்
மரணித்துப் போனவர் ஆன்மா!
நிர்கதியும், நிர்மூலமும் கொண்டவர்க்கு
ஞாபகச் சின்னமும் நிர்மூலம்
இக்கதி பார்த்து கண் விழித்து
நீதிதேவதை பேசிடுவாளோ ??
ஊமைக் குரலாய் போயிடுமோ?
மண்வாசம் கண்ட பூமி
இரத்த வாடை வீச, நிர்மூலமாய்
மிஞ்சியவர் அழுகுரல் கேட்கவில்லையோ?
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...