ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-50
05-11-2024

அழியாத கோலங்கள்

பள்ளிக்காலமது பறந்தோட
புள்ளிக்கோலமது சிறகடித்து
அள்ளி குடும்பத்தைச் சுமந்து
அதுவே வாழ்வென நினைந்து!

சொந்தமெல்லாம் சூழ்ந்திருக்க
சோர்வில்லா கனவுமிருக்க
அனுபவமும் வண்ணமாய் மிளிர .
அழியாத கோலங்கள் மாறி

மங்கி பார்வை போனாலும்
மங்காத அறிவொளியாய்
எட்டி பிடிக்க கைகளுமற்று
எவர் உதவுவாரோ மனம் உற்று

புலனை முடக்கி நலனை அடக்கி
புலரும் பொழுதெல்லாம் ஏங்கி
முதுகெலும்பெல்லாம் வலி நரம்பாகி
முதுமை வலியின் உச்சமாகி

பிள்ளை வருகை பெருந்தவமாகி
பேச்சை தொலைத்த தொலைபேசியும்
பேசா மனங்களும் கண்டாள்
பேதை மூதாட்டி, கோலமும் அழகே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading