நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-50
05-11-2024

அழியாத கோலங்கள்

பள்ளிக்காலமது பறந்தோட
புள்ளிக்கோலமது சிறகடித்து
அள்ளி குடும்பத்தைச் சுமந்து
அதுவே வாழ்வென நினைந்து!

சொந்தமெல்லாம் சூழ்ந்திருக்க
சோர்வில்லா கனவுமிருக்க
அனுபவமும் வண்ணமாய் மிளிர .
அழியாத கோலங்கள் மாறி

மங்கி பார்வை போனாலும்
மங்காத அறிவொளியாய்
எட்டி பிடிக்க கைகளுமற்று
எவர் உதவுவாரோ மனம் உற்று

புலனை முடக்கி நலனை அடக்கி
புலரும் பொழுதெல்லாம் ஏங்கி
முதுகெலும்பெல்லாம் வலி நரம்பாகி
முதுமை வலியின் உச்சமாகி

பிள்ளை வருகை பெருந்தவமாகி
பேச்சை தொலைத்த தொலைபேசியும்
பேசா மனங்களும் கண்டாள்
பேதை மூதாட்டி, கோலமும் அழகே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan