18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-50
05-11-2024
அழியாத கோலங்கள்
பள்ளிக்காலமது பறந்தோட
புள்ளிக்கோலமது சிறகடித்து
அள்ளி குடும்பத்தைச் சுமந்து
அதுவே வாழ்வென நினைந்து!
சொந்தமெல்லாம் சூழ்ந்திருக்க
சோர்வில்லா கனவுமிருக்க
அனுபவமும் வண்ணமாய் மிளிர .
அழியாத கோலங்கள் மாறி
மங்கி பார்வை போனாலும்
மங்காத அறிவொளியாய்
எட்டி பிடிக்க கைகளுமற்று
எவர் உதவுவாரோ மனம் உற்று
புலனை முடக்கி நலனை அடக்கி
புலரும் பொழுதெல்லாம் ஏங்கி
முதுகெலும்பெல்லாம் வலி நரம்பாகி
முதுமை வலியின் உச்சமாகி
பிள்ளை வருகை பெருந்தவமாகி
பேச்சை தொலைத்த தொலைபேசியும்
பேசா மனங்களும் கண்டாள்
பேதை மூதாட்டி, கோலமும் அழகே!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...
19
Jun
“மதிமகன்”
வெற்றி”(359)
எட்டி எட்டிப் பார்க்கும்
எதிரிலும் வந்தும் நிற்கும்
கட்டி அணைக்க போக…
கண்ணாம் பூச்சி காட்டும்!
கிட்டுதென...
19
Jun
சிவரூபன் சர்வேஸ்வரி
செந்தூரப்பூவே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே//
மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே//
ஒய்யாரமாக ...