பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-51
12-11-2024

சூர வதை

கார்த்திகை வந்தாலே
கனத்த மனமும்
காந்தள் மலரும்
கல்லறை நினைவும்

இலையுதிர் காலமும்
இயற்கை அழிவும்
அவனி எங்கும்
அக்கிரமங்கள் கூடி

தட்டிக்கேட்போர் இன்றி
தலைக்கணம் ஊன்றி
தலை விரித்தாட
தலைவன் கந்தன்

தரணிக்கு…
தருவார் மறுபிறப்பு
கொடுமைகள் அகன்று
கடுமைகள் அற்று

அறம்வழி நடத்தி
அச்சம் புகட்டி
அறிவு காட்டி
ஆட்கொள்வர் சூரவதை!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading