” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-54
03-12-2024

பனிப் பூ

உடல் நடுங்க,
இருள் அதிகரிக்க
சுட்டெரிக்கும் சூரியன்
சூடேதும் இன்றி.

பூகோள வெப்ப வலயம்
பறவைகள் தேடிப் பறக்க
பூச்சிகளும் புற்றொடர்களும்
புதுமையாய் மறைய

வெண்பனி தூவி
வெண்கம்பளம் விரிக்க
மொட்டுக்களாய்த் தோன்றி
மலருமே பனிப் பூ.

ஒரு இராத்தல் பாணுக்கு
பல இராத்தல் உடை போட்டு
நடக்க முடியாம
நாமெல்லாம் தத்தளித்தாலும்

இதயம் குளிர்ச்சி
இனிமையான மலர்ச்சி
பனிப் பூ தருமே
பரவசமான மறுமலர்ச்சி.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan