சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-54
03-12-2024

பனிப் பூ

உடல் நடுங்க,
இருள் அதிகரிக்க
சுட்டெரிக்கும் சூரியன்
சூடேதும் இன்றி.

பூகோள வெப்ப வலயம்
பறவைகள் தேடிப் பறக்க
பூச்சிகளும் புற்றொடர்களும்
புதுமையாய் மறைய

வெண்பனி தூவி
வெண்கம்பளம் விரிக்க
மொட்டுக்களாய்த் தோன்றி
மலருமே பனிப் பூ.

ஒரு இராத்தல் பாணுக்கு
பல இராத்தல் உடை போட்டு
நடக்க முடியாம
நாமெல்லாம் தத்தளித்தாலும்

இதயம் குளிர்ச்சி
இனிமையான மலர்ச்சி
பனிப் பூ தருமே
பரவசமான மறுமலர்ச்சி.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan