” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-58
21. 01 – 2025

சிறுமை கண்டு பொங்குவாய்

பூமிப்பந்தின் புலம்பெயர்வை எண்ணி பொங்கு
பலகால தேசகனவு கேட்டுப்பொங்கு
மூதாதையரின் விஞ்ஞானம் முடங்கியதையும்
முதியோரெல்லாம் முதியவர் காப்பகத்தில் அடங்கியதையும் பொங்கு.

காடு களனி அழித்து கட்டடம் வளர்ந்ததென்றும்
கருணையற்ற உயிர்க்கொலை நடக்குதென்றும்
ஆயுளை அதிகரிக்க ஆரோக்கிய உணவில்லையென்றும்
ஆண்டவனேயென! செயற்கையாய் வாழும் மனிதன் சிறுமை கண்டு பொங்குவாய்
.
மூளை வளர்ந்து முன்னேற வேண்டிய பிள்ளை
மூலையில் கிடக்குது கணணியோடவென்றும்
மூச்சுவிட திறக்க வேண்டிய கதவும் ஜன்னலும்
மூசு பனி வீசி மூடிக்கிடக்குதென்றும்

ஏழையையும், பட்டினிச்சாவையும் கண்டு நீ பொங்கு
எதுக்கும் துணிந்து வாழ பலன் வேண்டி ஆண்டவனுக்குப் பொங்கு
உன்னை நம்பியவர்க்கு அடைக்கலம் கொடுத்து உள்ளத்தால் பொங்கு நீ
உள்ளமெல்லாம் ஊனப்பட்டவர் சிறுமை கண்டு பொங்குவாய்

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan