” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

மாசி

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-60

04-02-2024

மாசி

மாசி மகம் மகத்துவம் கேளாய், கடலில் நீராடி
மனிதநேயம் வளர்ப்பாய்
ஏழை எளியவர்க்கு தான தர்மம் செய்ய
ஏங்கிய புண்ணியம் தானாய் வருமாம்.

மாசியிலே சிவத்தோடு சக்தி இணைவரே
மகாசிவராத்திரி விரதமும் இவரே
மகாசங்கடஹர போக்கும் சங்கடங்களை
மாசி பெளர்ணமி சிறப்பு தர்ப்பணத்திற்கு

சீரற்ற ரத்த ஓட்டம்,மாரடைப்பு, மனநோய்
சளி மூட்டுவலி பக்கவாதம் பலவாறாய்
பனிக்காலப் பிணியும் பின்தொடருமே மாசியில
பழத்துடன் நார்ச்சத்து காய்கறி பற்றிடுமே நோய் எதிர்ப்பு.

மூசு பனி வீசும் மாசியிலே
மூடிய கதவில் மூச்சடங்கிக் கிடக்கும்
தேடுமே எம் இதயம் வசந்தகாலம்
தென்றலும் வீசும் மனம் மகிழும்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan