சூடுபிடிக்கிறது உதைபந்தாட்டம்…..

ரஜனி அன்ரன் (B.A) ...சூடு பிடிக்கிறது....09.07.2026 பச்சைப்புல்வெளி போர்க்களமாக பந்து மட்டும் ஆயுதமாக வீரர்கள் கால்களோ பம்பரமாக...

Continue reading

நடிப்பது மானிடம்!!!

தினக்கவி-2365 நடிப்பது மானிடம்..!! செய்வதெல்லாம் செய்துவிட்டு பொய் தான் உரைத்திடுவார் போதுமென்ற அளவிற்கு நாடகமாய் நடித்து வெல்லுவர் பச்சைப் பிள்ளை...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-61

11-03-2025

பங்குனி / பங்கு(நீ)

வசந்தத்தின் வாசல் பங்குனியே
வாழ்தலின் விரதமும் விழாவும் இம்மாதத்திலே
தமிழ் மாதங்களின் கடைக்குட்டியே
தமிழர் மனங்கள் பொங்குதே சந்தோஷத்திலே

புது வாழ்வின் ஆரம்பம் பங்குனியே
பசுமை பூக்கும் எங்கும் இனியே
புலம்பும் மனங்களில் துளிர் வருமே
பலவகை நோய்களும் அகலும் இங்கினியே

சூரியன் பயணம் மீனராசியிலே
சுமூகமான வாழ்வு தரும் மாதம் இதுவே
பங்குனி உத்திரம் தரும் புது நம்பிக்கை ஆன்மீக எழுச்சி
பல தெய்வ திருமணங்கள் இம் மாதத்திலே.

ஆண்டவன் படைப்பில் என் வாழ்வில்
அதிசயம் முதல் மகவு பங்குனியிலே
பொங்கி வரும் ஆனந்தம் என்ன சொல்ல
பேரனாந்தம் பங்கு நீ தந்தவனே.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading