” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-61

11-03-2025

பங்குனி / பங்கு(நீ)

வசந்தத்தின் வாசல் பங்குனியே
வாழ்தலின் விரதமும் விழாவும் இம்மாதத்திலே
தமிழ் மாதங்களின் கடைக்குட்டியே
தமிழர் மனங்கள் பொங்குதே சந்தோஷத்திலே

புது வாழ்வின் ஆரம்பம் பங்குனியே
பசுமை பூக்கும் எங்கும் இனியே
புலம்பும் மனங்களில் துளிர் வருமே
பலவகை நோய்களும் அகலும் இங்கினியே

சூரியன் பயணம் மீனராசியிலே
சுமூகமான வாழ்வு தரும் மாதம் இதுவே
பங்குனி உத்திரம் தரும் புது நம்பிக்கை ஆன்மீக எழுச்சி
பல தெய்வ திருமணங்கள் இம் மாதத்திலே.

ஆண்டவன் படைப்பில் என் வாழ்வில்
அதிசயம் முதல் மகவு பங்குனியிலே
பொங்கி வரும் ஆனந்தம் என்ன சொல்ல
பேரனாந்தம் பங்கு நீ தந்தவனே.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan