” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-61

18-02-2025

முகமூடி

பல முகங்களில்
பலவாறு முகமூடி
தினந்தோறும்
தீராத பொய்முகங்கள்

உண்மை உருக்குலைந்து
உயிரற்றதாகி ஊசலாட
நேர்மை அழிவும்
நம்பகரமான நாடகமாக

பதட்டத்தின் முகமூடி
பல தைரியத்தை வரவிக்க
சிரிப்பின் முகமூடி
சோகம் நிலைக்க

கோபத்தின் முகமூடி
கொடூரத்தை மறைக்க
பகைவர் முகமூடி
பாசமாய் நடிக்க

பாசமான முகமூடி
வேசம் நிலைக்க
அமைதியாய் முகமூடி
அராயகம் நிலைக்க

காரியம் நிறைவேற
கரம் கொண்ட முகமூடியை
கடைசி காலத்திலாவது
கருணையோடு களைந்திடு

சொந்த முகம் தொலைத்து
சுயமுகம் தேடுபவனை
சோர்விலா வார்த்தையால்
சொரிந்து வாழ்த்திடு

மகிழ்ச்சி பெருக்கெடுத்து
மனிதனாய் பிறப்பெடுப்பாய்
மண்ணிலே பிறந்த பலன்
மானிடனே பெற்றிடுவாய்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan