இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-61

18-02-2025

முகமூடி

பல முகங்களில்
பலவாறு முகமூடி
தினந்தோறும்
தீராத பொய்முகங்கள்

உண்மை உருக்குலைந்து
உயிரற்றதாகி ஊசலாட
நேர்மை அழிவும்
நம்பகரமான நாடகமாக

பதட்டத்தின் முகமூடி
பல தைரியத்தை வரவிக்க
சிரிப்பின் முகமூடி
சோகம் நிலைக்க

கோபத்தின் முகமூடி
கொடூரத்தை மறைக்க
பகைவர் முகமூடி
பாசமாய் நடிக்க

பாசமான முகமூடி
வேசம் நிலைக்க
அமைதியாய் முகமூடி
அராயகம் நிலைக்க

காரியம் நிறைவேற
கரம் கொண்ட முகமூடியை
கடைசி காலத்திலாவது
கருணையோடு களைந்திடு

சொந்த முகம் தொலைத்து
சுயமுகம் தேடுபவனை
சோர்விலா வார்த்தையால்
சொரிந்து வாழ்த்திடு

மகிழ்ச்சி பெருக்கெடுத்து
மனிதனாய் பிறப்பெடுப்பாய்
மண்ணிலே பிறந்த பலன்
மானிடனே பெற்றிடுவாய்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading