இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-63

25-02-2025

நம்பிக்கை

கரங்கள் பல சேர்ந்தும்
காவலர்கள் நிரை வந்தும்
வையகமே உனை தூற்றினாலும்
வைத்துவிடு உன்னில் நம்பிக்கை

கடவுளில் நம்பிக்கை
கன உயர் சக்தியென
தன்னில் நம்பிக்கை
திறமையும், திறனுமென

இருள் சூழ்ந்தாலும்
இதயம் தளர்ந்தாலும்
நம்மை உணர்த்த
நம்பிக்கை போதும்

தோல்வியுற்ற போது
வெற்றி தரும் நம்பிக்கை
முயற்சியெனும் இலக்கை
நம்பிக்கை நனவாக்கும்.

விழலுக்கிறைத்த நீரென
வீணாக்கி விடாதே
முயற்சியெனும் விதையிட்டு
முளைக்க வைத்திடு

பயிற்சியெனும் உரமிட்டு
பயிர் செழிப்பது போல
தன்னம்பிக்கை பயரிங்கே
நம்பிக்கை போல செழிப்புறும்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading