கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-63

25-02-2025

நம்பிக்கை

கரங்கள் பல சேர்ந்தும்
காவலர்கள் நிரை வந்தும்
வையகமே உனை தூற்றினாலும்
வைத்துவிடு உன்னில் நம்பிக்கை

கடவுளில் நம்பிக்கை
கன உயர் சக்தியென
தன்னில் நம்பிக்கை
திறமையும், திறனுமென

இருள் சூழ்ந்தாலும்
இதயம் தளர்ந்தாலும்
நம்மை உணர்த்த
நம்பிக்கை போதும்

தோல்வியுற்ற போது
வெற்றி தரும் நம்பிக்கை
முயற்சியெனும் இலக்கை
நம்பிக்கை நனவாக்கும்.

விழலுக்கிறைத்த நீரென
வீணாக்கி விடாதே
முயற்சியெனும் விதையிட்டு
முளைக்க வைத்திடு

பயிற்சியெனும் உரமிட்டு
பயிர் செழிப்பது போல
தன்னம்பிக்கை பயரிங்கே
நம்பிக்கை போல செழிப்புறும்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading