ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-63

25-02-2025

நம்பிக்கை

கரங்கள் பல சேர்ந்தும்
காவலர்கள் நிரை வந்தும்
வையகமே உனை தூற்றினாலும்
வைத்துவிடு உன்னில் நம்பிக்கை

கடவுளில் நம்பிக்கை
கன உயர் சக்தியென
தன்னில் நம்பிக்கை
திறமையும், திறனுமென

இருள் சூழ்ந்தாலும்
இதயம் தளர்ந்தாலும்
நம்மை உணர்த்த
நம்பிக்கை போதும்

தோல்வியுற்ற போது
வெற்றி தரும் நம்பிக்கை
முயற்சியெனும் இலக்கை
நம்பிக்கை நனவாக்கும்.

விழலுக்கிறைத்த நீரென
வீணாக்கி விடாதே
முயற்சியெனும் விதையிட்டு
முளைக்க வைத்திடு

பயிற்சியெனும் உரமிட்டு
பயிர் செழிப்பது போல
தன்னம்பிக்கை பயரிங்கே
நம்பிக்கை போல செழிப்புறும்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading