பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 658

அகதி

துப்பாக்கி அரக்கர்களால்  துரத்தப்பட்ட நிலை
துர்பாக்கியம் அடைந்தவர்களில் ஒருவனாக தூரதேசத்தில்
உயிரைவிட்டு உடல் மட்டுமே புலம்பெயர்ந்தது
வெள்ளையர் நடுவில் அகதிக் கோலமானது

அகதியெனும் புதிய பட்டம் ஒட்டிக்கொண்டது
அன்னிய தேசம் அன்னியனான உணர்வு
வந்த மண்ணின் கலாசாரம் தலைகீழெனினும்
சொந்த மண்ணைப்போல மனிதம் மரணிக்கவில்லை

இருப்பு நிரந்தரமாகி வசதிகள் வரவாகின
இருந்தாலும் தவிப்பும் வாழ்க்கையுடன் ஒட்டியது
ஊரில் சொந்தங்களின் மத்தியிலில்லா வாழ்க்கை
நான், எனக்குப்பின் என்னுடைய பரம்பரை

மொழியையைம் மதத்தையும் உள்வாங்குமா எதிர்காலம்
இரத்த உறவுகள் அருகமையாத இடைவெளி
அகதியாகி செய்த வம்சத்திற்கான துரோகமிது
என்னடையாளம் அகதி ஜெயம் ஒல்லாந்து

நன்றி
ஜெயம்
21-06-2023

Nada Mohan
Author: Nada Mohan