16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
ஜெயம் தங்கராஜா
கவி 669
சித்திரை மகளே வருக இத்தரைக்கு மகிழ்வைத் தருக
சித்திரை மகளே இனிதாக வருக
சிந்தியே வரத்தினை விடியலைத் தருக
இத்தரை மீதினில் வளங்களும் பெருக
தந்திடுவாயே வாழ்க்கையில் மகிழ்ச்சியை நெடுக
பசி பட்டினி பாரினைச் சூழுதே
புசிக்க உணவின்றி பஞ்சமும் ஆளுதே
வசிக்கவே முடியாத காலமும் நீளுதே
கசிந்துளம் உருகாயோ வறியவர் வாழவே
பலரது இரவுகள் இன்னும் விடியவில்லை
உலகத்து எல்லைகளில் துயரங்கள் முடியவில்லை
கலவரமான நிலவரம் ஏனெனெப் புரியவில்லை
மலருமாண்டே தீராயோ பூமிப்பந்தின் தொல்லை
சூது நிறைந்த பூலோகமாய் கண்முன்னே
தீதுசெய்வோர் தமைமறைத்து அதன் பின்னே
யாதுமிங்கு யாவர்க்குமில்லை நீதியின்றி மண்ணே
போதுமிது நற்செயலை மொழிவாயோ சித்திரைப்பெண்ணே
ஜெயம்
13-04-2022
Author: Nada Mohan
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...