இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

மலைப்பு

அந்தரத்தில் நின்று சுற்றுகின்றது பார்
இந்த சம்பவத்தை நடத்தியவர் யார்
உயிரினங்களை உருவாக்கி கவனிக்கின்றார் தந்தையாக
புரிந்துவிடா அளவிற்கு இருக்கின்றார் விந்தையாக

அற்புதங்களை அடுக்கடுக்காய் நிகழ்த்துகின்ற புனிதர்
கற்சிலையாய் வடித்தவரை வணங்குகின்றார் மனிதர்
இற்றைவரை காட்சி அளித்ததில்லை உருவமாக
உற்பத்தியாய் உண்டுபண்ணி இருக்கின்றார் அருவமாக

அறிவிற்கு அப்பாற்பட்ட அதிசய சக்தி
அறியமுடியாது திண்டாடுகின்றது மனித புத்தி
சின்னச்சின்ன அணுக்களுக்குள்ளும் அழகாக வீற்றிருக்கின்றார்
கண்ணுக்குத் தெரியாதிருந்து நன்மைகளை புரிகின்றார்

எவரெவர்க்கு எது தேவை எப்பொழுது
அவரவர்க்கு அள்ளியே வழங்கிடுவார் அப்பொழுது
வாழ்க்கையின் திரைக்குப் பின்னால் செயற்படுகின்றார்
கேள்விக்கு விடைகாணா புதிராக இருக்கின்றார்

ஜெயம்
12-09-2023

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading