இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

கவிஞனாய் பேரின்பம்

சந்தக் கவிகள் பாடிடச் சொல்லி
வந்து குதிக்குமே வார்த்தைகள் துள்ளி
சிந்திக் குவிந்திட்ட கருத்தினை அள்ளி
தந்திடும் மனமோ வைக்காதே தள்ளி

அழகான உணர்வதால் மனதிற்குள் கொண்டாட்டம்
மலர்களின் தேனதை உண்ணும் வண்டாட்டம்
பழகவே தமிழை தித்திக்கும் அமுதாட்டம்
அளவில்லா ஆனந்தம் திகட்டாது உற்சாகமூட்டும்

தொடர்ந்திட வேண்டும் அன்னையே பார்த்திடு
அடர்த்தியாய் அறிவினை இருக்கவே செய்திடு
இடர்பாடு வரினும் விரைந்தே தடுத்திடு
படர்ந்துமே பரவிட அருளைப் பொழிந்திடு

சருகென நினைத்ததைக் கூடவே இங்கு
மெருகேற்றிக் காட்டுவேன் கவியாக்கி அங்கு
கருவொன்று கிடைத்திட்டால் படைக்காது எங்கு
உருவாக்கி மகிழ்வதே கவிஞனின் பங்கு

ஜெயம்
24-09-2023

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading