19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
ஜெயம் தங்கராஜா
கவி 700
விலாசத்திற்கு சொந்தக்காரன் நான் மட்டுமல்ல
மகிழ்ச்சி வடிவெடுத்து அரங்கேறிய நிகழ்ச்சியாக
அர்த்தங்களை காவி கணங்கள் சொட்டிக்கொண்டன
வாழ்த்தும் வார்த்தைகளை அகப்படுத்தியது அகம்
உறவுகளின் உன்னதங்களுக்குள் உருகிக்கொண்ட வேளையது
சந்தோச மிகுதியால் உள்ளம் தத்தளித்தது
செவிகளையுரசிய பாராட்டுக்கள் சுகங்களை பிரசவித்தன
இன்பம் பொழுதை ஆக்கிக் கொண்டாடியது
நம்ப முடியவில்லை கனவொன்று நிஜமானது
கொட்டிக் குவித்த கற்பனைகள் அற்புதமானது
சிந்தித்து வரைந்த வரிகளும் தத்துவமானது
எழுதிய பாக்களால் கவிஞனெனும் முகவரி
பிறவிப் பயனை அடைந்ததாக மனத்திருப்தி
பேரன்பு கொண்டவர்களுடனான பூலோகப் பயணம்
தாயும் சேயும்போல நிறைவாகியது சொந்தம்
இரசிப்பவர் மத்தியில் வாழ்தலே அருள்
அவ்வரத்தைப் பெற்றேன் இதுவே வாழ்க்கையானது
ஜெயம்
16-11-2023
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...