திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

பெருமை

மனிதகுலத்திற்கு எதுதான் மகிமை சேர்க்கும்
பணிவோடு பண்பும் ஒழுக்கத்தை கோர்க்கும்
மண் கடமைகளை சரிவரச்செய்வது பெருமை
தன்னைப்போல் பிறரை நினையாதிருப்பது சிறுமை

தன் சாதியை பெரிதென போற்றிப்புகழுவதும்
தன் பரம்பரையை மூச்சுவிடாமல் புழுகுவதும்
இவைகளையெல்லாம் பெருமைகளென தம்பட்டமடிக்கும் மானிடா
எவையிங்கு பெருமையென இன்னும் அறியாததும் ஏனடா

சொத்துப்பத்துடன் பகட்டாக வாழ்வதில் பெருமை
பத்துத் தலைமுறைக்கு பணத்தைச்சேர்த்ததில் பெருமை
தான் தன்குடும்பம் நல்லாயிருப்பதால் பெருமை
மாண்பு இதுவென ஆண்டாண்டுக்கும் பெருமை

வகுப்பெடுத்தாலும் உண்மையான பெருமையை அறியாதோர்
பகுத்தறிந்தேனும் அதன் பக்கங்களை புரியாதோர்
இன்னும் பழைய பஞ்சாக்கத்தை பாடியபடி
என்னத்தை சொல்வதிங்கு பெருமையோ நாறியபடி

ஜெயம்
16-04-2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading