பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

நிர்மூலம்

இனமொன்றை நிர்மூலமாக்க அதிகாரம் துடிக்கின்றதே
பிணந்திண்ணி கழுகுகளாய் உயிர்களைக் குடிக்கின்றதே
என்னபாவம் செய்தார்களிந்த தமிழர் இனம்
கண்ணீர்விட்டு கதறினாலும் இரங்கவில்லை அரக்கரினம்

வேரோடறுக்க எடுத்துவிட்டார்கள் வலியோர் முடிவு
போராடியும் எளியோர் இல்லையொரு விடிவு
வணங்குகின்ற கடவுளுக்கும் தீர்த்துவைக்க நேரமில்லை
கணக்கின்றி மடிந்திடினும் எட்டியுந்தான் பார்ப்பதில்லை

அடிமையாக இருப்பது என்பது தொடர்கதையாக
கொடியவர்கள் அருகினிலே வாழ்க்கை சித்திரவதையாக
மண்ணொண்ணையும் நீருமாக ஒட்டாமல் வேற்றுமை
என்றுமே வரமாட்டேனென ஓட்டெமெடுத்ததே ஒற்றுமை

புத்தரை பின்பற்றி வாழ்ந்திடும் கூட்டம்
சத்தியம் தவறியே தலைகீழாய் ஆட்டம்
சாத்தியமில்லை இனிமேலும் இவர்கள் திருந்துவதற்கு
ஆண்டுகளெத்தனை போனாலும் முடிவொன்று வருவதற்கு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading