” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

நிர்மூலம்

இனமொன்றை நிர்மூலமாக்க அதிகாரம் துடிக்கின்றதே
பிணந்திண்ணி கழுகுகளாய் உயிர்களைக் குடிக்கின்றதே
என்னபாவம் செய்தார்களிந்த தமிழர் இனம்
கண்ணீர்விட்டு கதறினாலும் இரங்கவில்லை அரக்கரினம்

வேரோடறுக்க எடுத்துவிட்டார்கள் வலியோர் முடிவு
போராடியும் எளியோர் இல்லையொரு விடிவு
வணங்குகின்ற கடவுளுக்கும் தீர்த்துவைக்க நேரமில்லை
கணக்கின்றி மடிந்திடினும் எட்டியுந்தான் பார்ப்பதில்லை

அடிமையாக இருப்பது என்பது தொடர்கதையாக
கொடியவர்கள் அருகினிலே வாழ்க்கை சித்திரவதையாக
மண்ணொண்ணையும் நீருமாக ஒட்டாமல் வேற்றுமை
என்றுமே வரமாட்டேனென ஓட்டெமெடுத்ததே ஒற்றுமை

புத்தரை பின்பற்றி வாழ்ந்திடும் கூட்டம்
சத்தியம் தவறியே தலைகீழாய் ஆட்டம்
சாத்தியமில்லை இனிமேலும் இவர்கள் திருந்துவதற்கு
ஆண்டுகளெத்தனை போனாலும் முடிவொன்று வருவதற்கு

Nada Mohan
Author: Nada Mohan