” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

பள்ளிப்பருவம்

அந்த நாள் ஞாபகங்கள் நெஞ்சில் நின்றாடுதே
இந்த நாள் மீட்டியே நினைவுகளைக் கொண்டாடுதே
திரும்பியே பார்த்திடின் பள்ளிப் பருவத்தை
அரும்பியே ஆனந்தம் வருடுதே உள்ளத்தை

பறவைகளாய் பறந்துகொண்டு பேசி மகிழ்ந்த நேரம்
மறந்துகொண்டோம் துன்பங்களை நெஞ்சில் இல்லை பாரம்
பள்ளம் மேடு பார்க்காமல் துள்ளி திரிந்தோம்
உள்ளமெங்கும் வெள்ளை பேதமின்றி சிறகடித்துப் பறந்தோம்

தயங்கியபடி பாடசாலை சென்ற முதல் நாட்கள்
பயத்தைக் காட்டியே படிப்பையும் ஊட்டும் வாத்தியார்கள்
அழுதுகொண்டு வீட்டிற்கு ஓடியதும் ஞாபகம் இருக்கின்றது
இழுத்துவந்து அன்னை மீண்டும் விட்டதும் சிரிப்பாயிருக்கின்றது

சிலேட் பென்சிலால் கிறுக்கியதும் அழித்ததும் உடைத்ததும்
பிலேட்டால் மொட்டைப் பென்சிலை சீவி எழுதியதும்
நீல மைவிட்டு தெளித்து எழுதிய மைப்பேனாவும்
தாளில் ஊறாமல் எழுதிட போல்பொய்ண்ட் பேனாவுமென

பள்ளிக்கு தாமதமாச் சென்று வாங்கிய அடிகளும்
கள்ளமொளித்து வகுப்பிற்கு பிடிபட்டு மானம்போன நொடிகளும்
மொட்டைத்தலை ஜோண் மாஸ்டர் வந்தாலே முசுப்பாத்தி
குட்டுப்போட்டே படிப்பிப்பார் பாடத்தை ஜேம்ஸ் வாத்தி

நட்பு என்பதை கற்பு போலல்லவா மதித்தோம்
வம்பு செய்துமே வாழ்க்கையை கலகலப்பாக அனுபவித்தோம்
அந்த அற்புதப் பருவமதின் ஞாபகங்கள் அழிவதில்லை
இந்த உருவம் உருக்குலைந்தாலும் நினைவுகள் ஒழிவதில்லை

ஜெயம்
28-06-2024

Nada Mohan
Author: Nada Mohan