ஜெயம் தங்கராஜா

கண்கண்ட தெய்வம்

மண்ணிலுள்ள கண்கண்ட தெய்வம் அன்னை
விண்ணின் இறைவனையும் மீறிவிடும் தன்மை
என்னுருவம் பாராதே கருவறை சுமந்தாளென்னை
இன்னோர் உயிருக்காய் உருக்கியேவிடுவாள் தன்னை

தூக்கமில்லா ஆதவன் இவரென கூறுவேன்
தாங்கிவிடும் பூமியாயெண்றெண்ணி மனம் ஆறுவேன்
வேதங்களைக் கற்றுத்தந்த ஆசான் அவரென
பாதங்களை வணங்குவேன் அம்மன் உருவென

பூமியின் மேலே அதிசயம் பெண்மை
சாமியே அவரென்றால் உண்மையிலும் உண்மை
சுமைகளை சுருக்கி சுகமாக்கிவிடும் வித்தை
அமைந்த பெண்ணினம் அகிலத்தில் விந்தை

பிரபஞ்ச சக்தி அன்னைக்குள் அடக்கம்
பிரமிக்கும் சக்தி அவரிடம் பிறக்கும்
இறைவனும் மதிக்கும் படைப்பென இருக்கும்
இறைவியே அன்னை அண்டமே துதிக்கும்

ஜெயம்
09-05-2022

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading