சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

கவி அழகு

கருவொன்றை கவி புனைய எடுத்து
உருவாக்கி வார்த்தைகளை சந்தங்களைத் தொடுத்து
உளத்தோடு பேசுகின்ற பாவொன்றின் வடிப்பு
உலகத்தில் அதுவன்றோ அழகான படைப்பு

அற்புதமாய் வரியமைத்து மொழி விளையாட்டு
சொற்றொடரில் கொப்பளிக்கும் கற்பனையின் கூட்டு
கவியெல்லாம் அழகாகும் புதுமைகளை சிந்திவிட
செவிநுழைந்து நெஞ்சைத்தொடும் வாசிப்பதை கேட்டுவிட

பாரதியார் கவிகளெல்லாம் கொண்டதென்ன எழில்
காரணம் அவருக்கு கவியெழுதுவதே தொழில்
வனப்பான கவிதைகளும் சிந்தையிலே தேங்கும்
கணக்கில்லா இரசிகர்களை ஈர்ப்பாலே உள்வாங்கும்

ஜெயம்
24-01-2025

Nada Mohan
Author: Nada Mohan