ஜெயம் தங்கராஜா

ச. சி. ச

நம்பிக்கை

தேடிப்பார் அந்ந வானமே வசமாகும்
ஓடிக்கொண்டிருந்தாலே வெற்றியும் ஒருநாள் நிஜமாகும்
கடந்து செல்கின்றது நமக்கான காலம்
கிடந்தால் சோம்பியே தாங்குமா ஞாலம்

துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு
இன்று மறுபடியும் புதிதாக பிறந்துவிடு
சோதனைகள் தாராளமாக வந்துவந்து போகும்
வேதனையிலும் கலங்காததே புத்திசாலிக்கு அழகாகும்

சாதிக்கப்பிறந்தவன் நீ அச்சத்தை தூக்கியெறி
மோதியுடைத்திடு தடைகளை கொள்வாயே வெறி
நம்பிக்கையின்மையை விழும் நிழலுக்குமில்லாமல் அகற்றிவிடு
நம்பியவர் கெட்டதில்லை வாழ்க்கையின் உச்சந்தொடு

எண்ணங்கள் எப்படியோ அப்படியே வாழ்நிலை
தன்னையே மீளமைக்க மாறிவிடும் சூழ்நிலை
உன்னையே நீயறிந்தால் நிலைமை சரியாகும்
மண்ணிலே உனக்கென சரித்திரம் உருவாகும்

ஜெயம்
19-02-2025

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading