” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

நான் வாழவே எனது வாழ்க்கை

முயன்று பார்க்கின்றேன் முழுதாய் முடியவில்லை
இயன்ற வரை எட்டிக்கொள்வேன் நினைத்த எல்லை
பயணித்தே சுயமாக எதிர்கொள்வேன் வருந்தொல்லை
தயவுசெய்து யாரும் உரைக்கவேண்டாம் எதிர்மறைச்சொல்லை

சுற்றும் உலகில் காற்றைப்போல சுற்றித்திரிவேன்
பெற்று நல்லனுபவத்தை வாழ்க்கையை அறிவேன்
கிட்டாதென பயமில்லை போராட்டம் புரிவேன்
எட்டாத கிளைகளின் கனிகளையும் பறிப்பேன்

எந்நிலை வந்து தந்தாலும் பேரிடரும்
என்நிலை பிரயத்தனத்துடன் பிராயணத்தைத் தொடரும்
முன்னிலையில் நமிக்கையின் நிகழ்வுகளே இடம்பெறும்
இந்நிலை காலாகாலமும் காலாவதியாகாமல் கூடவரும்

முன்வந்தே காலமும் என்னுடன் கைகோர்குமே
கண்முன்னே வாழ்க்கைச் சோலையும் பூப்பூக்குமே
மண்ணுலகம் என் தேவைகளைத் தீர்க்குமே
என் வாழ்வும் அர்த்தமதைச் சேர்க்குமே

ஜெயம்
13-12-2022
https://linksharing.samsungcloud.com/mndTD5e5HD53

Nada Mohan
Author: Nada Mohan