மாறியதே வாழ்க்கை

நகுலா சிவநாதன் மாறியதே வாழ்க்கை மாறியதே வாழ்க்கை மனம்போன போக்கிலே! கூறியதே கதைகளும் குழம்பிய குட்டைகளாய் வெப்பத்தின் அதிகரிப்பாய் வேறிட வாழ்க்கையும் இன்று தெப்பமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

நடிப்பு

எது தங்கம் எது தகரம் இன்னும் தெரியவில்லை
யார் அசல் யார் நகல் அதுவும் புரியவில்லை
முகமா இல்லை முகமூடியா முன்பே சரியாய் தெரியவில்லை
அகத்தை சரியாய் கணித்துவிட கொண்ட அனுபவம் போதவில்லை

பொய் பேசி பொய்யுடனே வாழும் போலி மனிதர்கள்
மெய்யானவர் தாமென உலவிடுவார் வேசம் கலையுமட்டும் புனிதர்கள்
உலகமகா நடிப்பு சிவாஜி கணேசனையே தூக்கி முழுங்கிடுவார்
பழகிகிடுவார் நண்பரென காரியம் முடிந்ததென்றால் சொல்லாமலே விலகிடுவார்

தற்போதைய வாழ்க்கையுடன் நடிப்பு என்பது கொடிகட்டிப் பறக்கின்றது
சொந்த சுபாவத்தை மறைத்து வாய்கள் மட்டுமே பேசுகின்றன
தனக்கு நன்மை பயக்கின் சாத்தானையும் சர்வேஷ்வரனென புகழுவார்
மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்து
வாடகைக்கு வாய்விட்டு மகிழுவார்

அடிபட்ட பின்புதான் வாழ்க்கையில் சிலரை அறிய முடிகின்றது
பிடிபடும் வரைக்கும் நடிப்பவர்களின் நாடகம் தொடரத்தான் செய்கின்றது
தேவைகள் முடியுமட்டும் பாசம் நேசம் அழகாகவே அரங்கேறுகின்றன
நோவைத் தரும் அவைகளென தூக்கியெறிந்த பின்னரே தெரிகின்றது

ஜெயம்
30-04-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading