” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

நடிப்பு

எது தங்கம் எது தகரம் இன்னும் தெரியவில்லை
யார் அசல் யார் நகல் அதுவும் புரியவில்லை
முகமா இல்லை முகமூடியா முன்பே சரியாய் தெரியவில்லை
அகத்தை சரியாய் கணித்துவிட கொண்ட அனுபவம் போதவில்லை

பொய் பேசி பொய்யுடனே வாழும் போலி மனிதர்கள்
மெய்யானவர் தாமென உலவிடுவார் வேசம் கலையுமட்டும் புனிதர்கள்
உலகமகா நடிப்பு சிவாஜி கணேசனையே தூக்கி முழுங்கிடுவார்
பழகிகிடுவார் நண்பரென காரியம் முடிந்ததென்றால் சொல்லாமலே விலகிடுவார்

தற்போதைய வாழ்க்கையுடன் நடிப்பு என்பது கொடிகட்டிப் பறக்கின்றது
சொந்த சுபாவத்தை மறைத்து வாய்கள் மட்டுமே பேசுகின்றன
தனக்கு நன்மை பயக்கின் சாத்தானையும் சர்வேஷ்வரனென புகழுவார்
மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்து
வாடகைக்கு வாய்விட்டு மகிழுவார்

அடிபட்ட பின்புதான் வாழ்க்கையில் சிலரை அறிய முடிகின்றது
பிடிபடும் வரைக்கும் நடிப்பவர்களின் நாடகம் தொடரத்தான் செய்கின்றது
தேவைகள் முடியுமட்டும் பாசம் நேசம் அழகாகவே அரங்கேறுகின்றன
நோவைத் தரும் அவைகளென தூக்கியெறிந்த பின்னரே தெரிகின்றது

ஜெயம்
30-04-2023

Nada Mohan
Author: Nada Mohan