திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

பெற்றோரே

ஞாலத்திலே மனுஷ பாக்கியம் கிடைத்தது
கோலத்தை ஈருயிர் சேர்ந்தே படைத்தது
பொய்யான கூடு என்றாலும் கற்றோரும்
மெய்யென்றே நினைத்து படைத்தார்கள் பெற்றோரும்

பாக்கியம் கிடைத்தது அன்னையின் அருகில்
போக்கிய வாழ்வெல்லாம் தந்தையின் நிழலில்
காவிக்கொண்ட நல்வாழ்வை தந்தவர் இவர்கள்
கோவிலுக்குள் இருக்கவேண்டிய தெய்வங்கள் அவர்கள்

தாய் ,மொழியாக தந்தையோ வழியாக
சேய் விழிகளின், பார்வையின் ஒளியாக
அரியதோர் உறவுகளாய் பெற்றோர்களே உலகில்
பெரியபேர்கள் அவர்களிடம் கற்றுக்கொண்டேன் பலதை

கருத்தரித்தேன் , கொண்டார்கள் என்னாலே  மகிழ்ச்சி
உருத்தித்த பின்னரும் தொடருதந்த நிகழ்ச்சி
ஐயமில்லை எனக்கு அருள்தரும் சாமிகள்
வையகத்தின் மேலே சுழலும் பூமிகள்

ஜெயம்
15-05-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading