பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

மூண்ட தீ

முள்ளிவாய்க்கால் முற்றத்தில்
மூண்ட நெருப்பு
நெடுங்காலம் ஆகிடினும்
நினைவைவிட்டு  நீங்காது
சிந்திய இரத்தமும்
சீவன் துளிகளும்
கண்முண்ணே நிழலாடுகின்றது
கனவையும் நிரப்புகின்றது
வழிகளில் வலிகள்
விடாமல் துரத்தியது
விழிகளில் ஈரம்
வாழ்வும் நொருங்கியது
காலனோ அருகாமையில்
கூப்பிடும் தூரத்தில்
மரணங்கள் மலிவானது
மூச்சு தினறியது

கோவில் தெய்வங்கள்
கைவிட்டு விட்டன
மனிதர் உலகம்
மவுனம் காத்தது
நந்திக்கடலில் மூழ்கி
நீதி மூர்ச்சையானது
ஏனென்று கேட்காதே
எட்டியே எட்டுத்திக்கும்
சோதனைகள் மொத்தமாக
சாபமான பொழுதுகள்
வேதனை நிலையானது
வாழ்வே போர்க்களமானது
எதிர்பார்த்தவரும் எதிரிகளாகி
ஏதிலிகளாக்கி பழிதீர்த்தனர்
தேகங்கள் சரிந்தன
தோல்வி வரலாறானது

தொப்பிள்கொடி உறவுகளும்
தொலைந்தனரே அக்கரையில்
இனத்தின் சாட்சிகளும்
இல்லாது மறைந்தனர்
நம்பினோர் வஞ்சித்து
நெஞ்சை மூடினர்
குண்டு சத்தங்களால்
கெட்டுப்போனது வழமை
துக்கம் குடிகொண்ட
தூங்காத நாட்களவை
திண்டாடியது இனமொன்று
தாயகம் சிவப்பானது
காவல் தெய்வங்கள்
கருகியே காவியமானார்கள்
அன்றே  பற்றியது
ஆயுளுக்கும் அணையாது

ஜெயம்
28-05-2023

Nada Mohan
Author: Nada Mohan